க‌விஞ‌னுக்கு முற்றுப்புள்ளி வைத் த‌வ‌ள்

நவம்பர் 9, 2009

எவளோ ஒருத்தி எழுதிக் கொண்டிருந்த
கவிதையின் கடைசி வரி
நல்லவனுக்கு காதலிக்கத் தெரியாதென முடிந்தது
வார்த்தைகளால் தூண்டி
காதலென‌ பொய் சொல்வதாய்
சில வரிகள் சொல்லிக் கொண்டிருந்தது
ந‌ட்பினை காத‌லென‌ த‌வ‌றாய் புரிந்துகொள்வ‌தாய்
சிரித்துப் பேசுவ‌தெல்லாம் காத‌ல‌ல்ல‌ என்ப‌தோடு
அங்க‌ங்கு
சில‌ திட்டும் வார்த்தைக‌ளை சேர்த்திருந்தாள்
எவ‌னோ எவ‌னோ
அப்ளிகேஷ‌ன் போடும்
த‌பால் பெட்டியா நான்
எனும் கோவ‌மான‌ வ‌ரியில் கொஞ்ச‌ம்
புன்ன‌கைத்தேன்.
க‌விதைக்கு முற்றுப்புள்ளி வைத்த‌வ‌ள் தான்
க‌விஞ‌னுக்கும் முற்றுப்புள்ளி வைத்த‌வ‌ள்.
O
நீண்ட நாள்களுக்குப்பின்னர்
அவளின்
பார்வை தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்
அவள் பார்த்துவிடக் கூடாதென்றும்
அவளைப் பார்க்கவேண்டுமென்றும்
இரண்டு திசைகளில் இழுக்கிறது
திருட்டுப் பூனைகள்
மீசையின் மயிர்கள் மறைக்க
பார்த்தவளை பார்க்காதது போல்
கடந்து செல்கிறான்
இரவு தீக்குளிக்கப் போகிறவன்
O
மதுக்கோப்பைகளில்
மினுமினுப்பாய் எதிரொலிக்கிற‌து
காத‌ல் க‌விதைக‌ளை தொலைத்த‌
பூனையின் க‌ண்க‌ள்
யாரும‌ற்ற‌ ம‌ன‌மெங்கும் நிறைகிற‌து
எரிந்த‌ கொள்ளியின்
புகைப்ப‌ட‌ல‌ம்
காமத்தின் கூடாரங்களிலிருந்து
தலை தெறிக்க
ஓடிக் கொண்டிருக்கிறான்
தேவதையின் நிழல் பார்த்தவன்
முதலும் கடைசியுமாய்
தற்கொலை செய்தவன்
மேல் காறி உமிழுங்கள்
காதல் புரியாதவர்
O
மழையில் நனைபவனும்
குடையில் ஒளிபவளும்
ஒரே தெருவில்
சந்திக்க நேர்வது
காதலின் தவறல்ல.
O
மயிரிழைகள் அறுத்து
முன்னேறிச் செல்கிறது
காமத்தின் துருப்புகள்
தப்பியோட வழியின்றி
செத்து விழுகிறது
காதல் குழந்தைகள்
மகரந்த பனிமழை
காளான்களை நனைக்கையில்
காதல் புனிதமென்பீர் நீர்.
காமமும் புனிதமென்பேன் நான்.

எரியும் த‌வ‌ளைக் கூடுக‌ள்

நவம்பர் 9, 2009

ப‌னிபொழியும் நில‌த்திலிருந்து
க‌ண்ணாடியால் பிரிக்க‌ப் ப‌ட்டிருக்கிறது
த‌வ‌ளைக‌ளின் கூடு

க‌ர‌க் க‌ர‌க்கோ
ப‌ட‌ ப‌ட‌வோ
த‌ன் மொழியில் பாம்புகளை
அழைக்கிற‌து த‌வ‌ளைக‌ள்

க‌ண்ணாடிக்குள்ளிருந்து
ப‌னி உருக்கும் த‌வளைகள்
கால்க‌ளை க‌ன்ன‌த்துக்கு வைத்திருக்கிறது
தேனீர் அருந்தும் பொழுதுக‌ளில்

அடுத்த‌ நிமிட‌த்தின் ம‌ர‌ண‌த்திற்கு முன்
வெட்ட‌ப்ப‌ட்ட‌ கால்க‌ளுட‌ன்
லிப்டுகளில் அலையும் த‌வ‌ளைகள்
சுவ‌ற்றில் எழுதுகிற‌து
ம‌ழை ப‌ற்றிய‌ க‌விதைக‌ளை

o
மெளனத்தின் தாள்களை இரவில் கிழிக்கிறது
சில தவளைகள்
மொட்டைமாடி பிரதேசங்களில் பிசுபிசுக்கிறது
சிமெண்ட் கலவைகள்
பழைய கட்டிடங்களில்
வெள்ளையடித்துப் போயிருக்கிறது
இரவில் பொங்கிய‌ பாதரசம்
இடம்பெயர்தல் குறித்த உண்மைகளை
மறைத்திருந்தான் நண்பனொருவன்.
வழக்கம்போல்
மழை அடித்து ஓய்ந்தது.
o
மறைவிடங்களிருந்து வெளிவருகிறது தவளையொன்று
பாம்பினைத் தின்னும் பாதைகளில்
ஓலமிட்டு அலைகிறது ஆண்தவளை
யாருமற்றவர்களை யாதுமற்றவையாய்
திருத்தி எழுதுகிறது கடைசி துளி பனி
மின்சார பறவையின்
கடைசி சிறகு வந்தடைகையில்
போர்வையை இறுக்கமாக்கி
இறந்து போகிறேன் நான்.
என் மரணத்தின் சாட்சியாய்
கல்லறை மேல் பூத்து நிற்கும்
கவிதை பூவும்
காதல் தவளையும்
நானே படைத்தவை

தேகமெல்லாம் காமம்.

நவம்பர் 9, 2009

மருதாணி விரல்களில் முத்தமிட
எத்தனிக்கையில்
எட்டி தள்ளுகிறாய் நீ
செவ்விதழ்களைக் கவனிக்காததை
கைகாட்டி சிரிக்கிறது காதல்.
o
தெருவெல்லாம் துடைத்த‌ ம‌ழை
என் ம‌ன‌தை குப்பையாக்கியிருக்கிற‌து
முழுதுமாய்
ந‌னைந்திருந்தாய் நீ
o
யாரும் பார்த்திராத‌ பார்வைக‌ளால்தான்
காத‌ல் சொன்னாய்
யாரும் சொல்லாத
ஸ்ப‌ரிச‌ங்களால் காம‌ம் த‌ந்தாய்
யாருக்கும் புரியாத‌ மெளன‌ங்க‌ளால்தான்
பிரிந்து சென்றாய்
சொல்ல‌ முடியாத‌ காத‌லுட‌ன்
சொல்ல‌ முடியாத‌ காம‌த‌துட‌ன்
சொல்ல‌ முடியாத‌ மெள‌ன‌ங்க‌ளால்
சொல்லாத‌ சில‌ வ‌ரிக‌ளை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
o
ந‌ள்ளிர‌வில் நின்றுவிட்ட‌ ம‌ழை
நினைவூட்டிப் போயிருக்கிற‌து
கொடும் ப‌க‌லில் பிரிந்து
சென்ற‌ உன்னை
o

ReBlogging உதவமுடியுமா?

நவம்பர் 4, 2009

பார்வையற்ற மாணவர்கள், Visually Challenged Students தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தேர்வின் போது அவர்களுக்கு படித்துக்காட்ட ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவ முயற்சி செய்யுங்கள் ..

விபரங்களுக்கு இந்த பதிவைப் படியுங்கள்.

நன்றி பரிசல்காரர் .ரின் இந்த பதிவையும் படியுங்கள்..

ReBlogging From : உதவமுடியுமா?

பேராண்மையும் மஞ்சள் ஜட்டியும்

அக்டோபர் 28, 2009

பேராண்மை வில்லும் அம்புமென முதல் விளம்பர பலகையிலேயே விழிகளை ஈர்த்த படம்.மாலுமிகளின் காதலை சொன்ன இயற்கை,வெளிப்படையான அரசியல் எதிர்ப்பு வசனங்களை ஒளித்து வைத்ததுடன் காதலின் புனிதக் கட்டுமானத்தை உடைத்த ஈ படங்களை தந்த எஸ்.பி.ஜனநாதன் கொடுத்த நம்பிக்கையென மாற்று சினிமா என்ற ஈர்ப்புதான் பேராண்மை தந்து வைத்திருந்தது.

மலைவாழ் மக்களில் ஒருவனாக "ஜெயம்" ரவி. N.C.ச் மாணவர்களின் பயிற்சியாளர். இவர் பயிற்சியாளராய் இருப்பதை விரும்பாத மாணவிகள். அவர்களின் சீண்டல்.கடைசியில் சீண்டிய மாணவிகளை வைத்தே தன் நாட்டை பெருமைபடுத்தும் சக்தே இந்தியா.

1972-ம் ஆண்டு வெளியான ரஷ்ய படம் A zori zdes tikhie. அதன் இயக்குநர் Stanislav Rostotsky. அதன் கதை இதுதான்,

புரட்சிக்கு முன்பு, விவசாயியாக இருந்த ஒருவர் புரட்சியில் பங்கேற்றுப் பிறகு சோவியத் ராணுவத்தில் ஒரு படை பிரிவுக்கு தலைமை ஏற்கிறார். 1942ல் – இரண்டாம் உலகப்போரின் போது, ரஷ்ய எல்லைப் பகுதியில் உள்ள காட்டிற்குள், நுழைந்த ஜெர்மானியப் படைகளை எதிர்த்து, ஏறக்ககுறைய 50 வயதான அவர் தலைமையில் 5 பெண்கள் 16 ஜெர்மானிய நாஜிகளை எப்படி கொல்கிறார்கள்? என்பதுதான் கதை.

படத்தின் துவக்கத்தில், கிராமத்தான் தொனியில் இருக்கிற அந்த தளபதியை, படித்த அந்த ஐந்து இளம் பெண்களும், அடிக்கடி கிண்டல் செய்வதாக இருக்கிறார்கள். ‘இளமைக்கே உரிய குறும்பு’ எனறு அமைதி காக்கிறார் அவர். பிறகு நாஜிகளுடன் சண்டை செய்யும்போது, போருக்குரிய வியூகங்களை எப்படி வகுக்கிறார். அந்தப் பெண்களிடம் இருக்கும் வீரத்தை வெளிகொண்டு வந்து எப்படி புத்திசாலித்தனமாக, வேகமாக இயங்குகிறார், என்பதை பார்த்து வியக்குகிறார்கள் அந்தப் பெண்கள். அவருடன் இணைந்து 16 ஜெர்மானிய நாஜிகளை கொன்று ஒழிக்கிறார்கள்.

இரண்டு படங்களையும் த‌மிழ் சினிமா ம‌சாலாவில் தோய்த்து எடுத்து காய‌ப்போட்டிருக்கிறார்.

எருமைமாட்டுக்கு பிரசவம் பார்க்கும் காட்சியில் மாணவிகள் ஆங்கிலத்தில் கிண்டல் செய்வதும் பயிற்சிக்குப் போவதாய் சொல்லும் போதே கண்டிப்பாய் பயிற்சியாளர் ஹீரோதான் எனத் தெரிந்து விடுகிறது. இதை முக்கிய சஸ்பென்ஸ் என நினைத்து ஜீப்பிலிருந்து கை,கால் என தனித்தனியாக இறங்கி வருகிறார் ஜெயம் ரவி. அய்யோ பாவம்!

N.C.C பயிற்சியாளர் பயிற்சிக்கான நேரத்தில் வகுப்பறையில் அமரவைத்து உலக அரசியல் பற்றி கற்றுக்கொள்ள சொல்கிறார். எந்த நிமிடம் என்ன நடக்குமென தெரியாத தலை போகும் போராட்டாத்தின் நடு நடுவே இது M.12 ரக துப்பாக்கி, இது AK.46 ரைபிள், இது வேப்ப மரத்தின் சுள்ளி என கன்னன்னாபின்னன்னா என பாடம் எடுக்கிறார். பின் வரிசையில் எந்த குப்பனோ சுப்பனோ குறட்டை விடுவது முன்வரிசை வரை கேட்கிறது.

எருமையின் வயிற்றில் பிரண்டு விழுந்த கன்னுக்குட்டி போல் சம்பந்தமற்ற இடங்களின் அரசியல் வசனங்கள் துருத்திக்கொண்டு நிற்பது தனியாய் தெரிகிறது.முதல் பாதி முழுக்க மலைஜாதி மக்களில் ஒருவனை, ஹீரோவை அவமானப்படுத்தும் வசனங்களை ஜனநாதன் ரூம் போட்டு எழுத, எல்லா வசனங்களையும் சென்சார் ரூம் போட்டு வெட்டி விட்டது. அய்யோ பாவம் இயக்குனர்.

அண்ணாம‌லை ர‌ஜினியின் க‌ட‌வுளே க‌ட‌வுளே நினைவிருக்கிற‌தா. அதன் காட்சியை இர‌ண்டு முறை இங்கு உப‌யோக‌க‌ப் ப‌டுத்தி இருக்கிறார்க‌ள்.இதெல்லாம் தேவையா ஜ‌ன‌நாத‌னுக்கு?

சுத்தி அரிவாளை அங்கங்கு உபயோகிக்க முயன்றிருக்கிறார். வீணாக்குவதற்கு உபயோகிக்காமல் இருக்கலாம்.

அங்கக்கு அப்பா!இதோ நம்ம ஜனநாதன் என தலை நிமிர வசனங்கள் கை கொடுக்கிறது.

"கிராம‌த்துப் பொண்ணுக்கு முந்தான‌ ஒதுக்கி கால‌ம் போச்சு, ந‌க‌ர‌த்துப்பொண்ணுங்க‌ளுக்கு முடிய‌ ஒதுக்கியே கால‌ம் போச்சு"

"நான் இங்லீஷ் பேசுனா என் ம‌க்க‌ளுக்கு புரியாது, உங்க‌ளுக்கு புடிக்காது"

லென்ஸ் வ‌ச்சு தேட‌னும். பாவ‌ம் ஜ‌ன‌நாத‌ன் ர‌சிக‌ர்க‌ள்!

ஒரே ஒரு ஆறுதல் இந்திய ஏவுகணைய அழிக்க வருகிறவர்களில் விஜயகாந்த் பாணியில் எந்த "கான்" களும் இல்லாமல் சர்வதேச கூலிப்படையாய்க் காட்டியது.

தினம்தினம் கந்த சஷ்டி கவசத்துடன் விழிக்கும் பெண், "காக்க காக்க கனகவேல் காக்க" வரியில் இறந்து விழுவது யாராலும் கவனிக்கப்படாமல் போன கடவுள் மீதான பகடி.

என்.சி.சி தோழிகளின் அறைக்குள் நுழைய வேண்டிய அவசியம் ஜன நாதனுக்கு தேவையா? குளியலறையில் துண்டை அவிழ்த்தெறிவது, மஞ்சள் ஜட்டியை கழட்டுவது நிர்வாணமாய் ஹீரோவை சந்திக்கப் போகும் பெண் என அடித்தட்டு மக்களை உணர்ச்சி தூண்டும் காட்சிகள் வெறும் வியாபாரத்திற்கா?

மலை ஜாதிப் பையன் என்பதற்காக செருப்பை தூக்கி போடுகிறார் உயர்(ஜாதி) அதிகாரி கக்கூஸ் கழுவ சொன்னாலும் செய்கிறார். இறுதியில் இவர் ஏவுகணையைக் காப்பாற்ற உயர் அதிகாரி விருது வாங்குகிறார். அந்த காட்சியில் மலைஜாதி ஹீரோவின் முகம் கூட இல்லை.கோபத்தை எதிரிகளிடம் தான் காட்டவேண்டும் என்ற வியாக்கியானம் வேறு. இவர்களைப் பொறுத்தவரை கட்டமைக்கும் எதிரி என்பது எல்லைக்கு அப்பாலிருந்து வந்து போர் தொடுப்பவன் மட்டுமே. உள் நாட்டின் உயர்ஜாதியினர் என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் இல்லையா?

இதுவரை சினிமாவில் இவர்கள் நுழைக்க நினைக்காத நிறைய குட்டி குட்டி விஷயங்கள் (பார்த்தீனிய செடிகள் வரை) புகுத்தியிருந்தாலும் காதில் கொலுசும்,கையில் கம்மலும், காலில் வளையலும் அணிந்தது போல் பொருந்தாத இடங்களில் அழகாயிருக்கிறது.

ஜன நாதன் தன் பாணியிலேயே படம் எடுக்கலாம். கமர்ஷியல் புகுத்துகிறேன் பேர்வழி என கம்யூனிசத்தை கடித்துக் குதறாமல் இருப்பது நல்லது.

அர‌ளிப்பூக்க‌ளும் பியூரெட் குழாய் க‌ளும்

அக்டோபர் 26, 2009

கூப்பிடும் தூரத்தில்
கற்களை சேர்த்து
ஓடிக்கொண்டிருக்கிறது ரத்த ஆறு
தடிமனாய் குமிழ் விட்டுக்கொண்டிருக்கிறது
பியூரட் குழாய் ஈகோ
கொதிக்கும் அமில
ஊற்றில்
சட்டென உறைகிறது பனிக்கட்டி நீர்
புகையெனப் பறக்கும்
கோபம் கலைந்தபின்
இழப்பதற்கு எதுவுமில்லை
நீயுமில்லை.
o
கூட்ட‌த்தில்
காட்டிக் கொடுத்து
புண்ணிய‌ம் சேர்த்த
அதே கொலுசுதான்
இன்று அமில‌த்தை ஊற்றுவ‌தும்
o
மரணம்
கோழைத்தனமென
இன்னும் நீங்கள் எழுதிக் கொண்டிருங்கள்
சதுர மில்லிமீட்டர் சதைத்துணுக்குகள்
பிய்ந்து விழுவது உஙகளுக்கு தெரியாது
கந்தக அமிலங்களால் காய்ந்து போன உள்ளங்களோ
கத்தி கீறி காய்த்துப்போன உள்ளங்கைகளோ
உங்களுக்கு கிடையாது
விடாமல் அறுத்துக் கொண்டிருக்கும்
வார்த்தை வாள்கள்
உங்கள் மீது பாய்ச்சப்படவில்லை
தொண்டையை நனைக்கும்
மீன்கொத்திப் பறவைகளை
குடுவை பீய்ச்சி விளையாடியவர் நீங்கள்
நீங்கள் அடுத்த கவிதை எழுதுமுன்
நான் தற்கொலை செய்துகொள்ளுமுன்
இந்த வரியை மட்டும் படித்துவிடுங்கள்
நான் காதலிக்கிறேன். நீங்கள் இல்லை.
o
இருள் பூத்துத் தொங்கும்
போன்சாய் ம‌ர‌ நிழலிலிருந்து
வெளிவ‌ருகிறாள்
அர‌ளிப்பூ தேவ‌தை
பாம்புக‌ளின் பாதைத் த‌ட‌த்தின்
மேல்
க‌ம‌ழ்ந்து கொண்டிருக்கிற‌து தாழ‌ம்பூ ம‌ண‌ம்
ப‌ழைய‌ க‌விதையொன்றின்
பெண்ணைப் பிசாசென மொழிபெயர்க்கிறார்
காதல் மொழி தெரியா பெயர்ப்பாளன்
எல்லாக் க‌விதைக‌ளிலும்
தேவ‌தை
என‌ அடித்து எழுதுகிறான்
ஆசிரிய‌ சித்த‌ன்
o

டெரகோட்டா சிற்பங்கள்

அக்டோபர் 23, 2009

எனக்குப்பதில் தெரியாத
கேள்விகளைக் கேட்கும் குழந்தைகளை
அதட்டி அடக்கி விடுகிறேன்
தெரியாமல் போனது
ஒரு கண்டுபிடிப்பாய்க்கூட இருக்கலாம்
o
நான் விரும்பிய‌ ப‌டிப்பை
நீயாவ‌து ப‌டிக்க‌ வேண்டும்
என்றேன் ம‌க‌னிட‌ம்.
அவ‌னின்
“நான் விரும்பிய‌தை யார் ப‌டிப்பது”
கேள்விக்கு
என்னிட‌ம் ப‌திலில்லை
o
கொஞ்சம் களிமண் எடுத்துக்கொள்ளுங்கள்
கெட்டியாக பிசையவேண்டும்
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்
நீங்கள் விரும்பும் வடிவத்தின்
அச்சில் வார்க்கவும்
அடைக்கப்பட்ட அறையில்
புத்தகங்களை எரித்து
க‌ளிமண்ணைப் போட்டுவிடுங்கள்
டாக்டர் பொம்மையோ
கணினி வல்லுனரோ
விரும்பும் சிற்பங்கள் தயாராகும்.
களிமண்ணின் விருப்பத்தை
மட்டும் கேட்காதீர்கள்.
o
க‌ட‌வுளைப்ப‌ற்றி
கேள்வி மேல் கேள்வி கேட்கிறது
குழந்தை
எப்படி சொல்வ‌து என‌க்குத் தெரியாதென‌
“சாமி க‌ண்ணைக்குத்தும்” என‌ முடித்துவிட்டேன்

குறள் வழிக் கவிதைகள்-2-காதல் நெர ுப்பு

அக்டோபர் 22, 2009

நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

(குறள் எண் 1104)

தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும், அருகில் வந்தால் குளிர்தலுமாகிய நெருப்பை, இவள் எங்கிருந்துதான் பெற்றாளோ?

உன் ஊடல் விலகலின்
நெருப்பு காத்திருக்கிறது
நீ வந்து அணைக்க
நீ வந்து அணைக்க image0012
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல் பனிமழை
குளிரிது குளிருது
ஒரே மருந்து
உன் நெருப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் பார்வை வெப்பம் பயந்தே
நெருங்குகிறேன் நான்
நெருக்கத்தில் குளிரும்
நெருப்பு நீ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் நெருப்பில் எனை எரி
என் நெருப்பில் நீ எரி
பிறக்கட்டும் புதிய பீனிக்ஸ் image0012
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் பார்வை வெப்பமின்றி
எரிகிறேன் நான் ஊடலில்
உன் தேக வெப்பம் பெற்று
குளிர்கிறேன் நான் கூடலில்

குறள் வழிக் கவிதைகள்-1

அக்டோபர் 22, 2009

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று

(குறள் எண் 829)

-வெளியில் நண்பராய்க் காட்டி மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரை சிரிக்க வைத்து மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நட்பெனச் சொல்லி
சிரித்து நடிக்கிறாய் நீ
உன் நடிப்புகள் தெரிந்து
சிரிப்பதாய் நடிக்கிறேன் நான்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நட்பிற்குள் நான்
நன்றாய் நடிப்பதை
இன்றுதான் கண்டுபிடித்திருக்கிறாய்
இந்த நடிப்பு உன்னிடம் கற்றதுதானென
எப்போது கண்டுபிடிப்பாய்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எல்லாம் கற்றுக் கொடுக்குமாம் நட்பு
இப்போது தொடங்கி இருக்கிறது
நட்பற்று நட்பாய் நடிக்கவும்
கற்றுக் கொடுக்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நானும் கொஞ்சம்
துன்பமாய் நடிக்கிறேன்
துணையாய் நடிக்கும் நீயாவது
இன்பமாய் இருந்து
விட்டுப் போ இதயத்துள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமக்குள் நட்பிற்குள் இடைபுகுந்த
ஒரு "டி" யால்
வந்திருக்கிறது
நம் நட்பிற்குள் நடிப்பு image0011
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தொடரும்…

துரோகம் ஒளியும் கதவு

அக்டோபர் 21, 2009

செருப்பைத் தொலைத்தபின்
எல்லோர்
கால்களையும் பார்த்தபடியே
வீடு வந்து சேர்ந்தேன்
o
காலைச்சுற்றும் நாய்களை
என்னால் பரிசளிக்க முடியாது
வருடலில் சுகம்காணும்
பூனைகளுமல்ல‌
உன் எண்ணங்களை எதிரொலிக்கும்
கிளியும் முடியாது
வளர்ப்பு பிராணியாய் இன்னும் மாறாத‌
உன் கருத்துகளில் மாறுபாடு கொண்ட‌
தனக்கான சுவர் படைக்கும் மனிதன் தருகிறேன்
புறக்கணிப்பாய் எனத் தெரிந்தும்.
o
கதவுக்குப் பின்னால்
துரோகம் ஒளியும் தெருக்களில்
ஊளையிட்டபடி இருக்கிறது தெரு நாய்
அறைகளில் ஊர்ந்து கொண்டிருக்கிறது
நெளி பாம்பென
மெளனம்
பேசுவதற்கு ஒன்றுமில்லாமல்
புன்னகைத்துக் கொள்கிறோம்
இரவில் இறந்து போனது
நட்பாய்க்கூட இருக்கலாம்
o
போன்சாய் மரங்களை
ஸ்கிரீன்சேவர் மீன்களை
ஃபிளாஷ் வெடிகளை
வரையப்பட்ட ஆறுகளை
பார்க்கும்
படைக்கும்
புதிய தலைமுறையொன்று
பின்னொரு நாளில்
கூகுளில் தேடும்
குடும்பத்தாரின் கான்டாக்ட் எண்ணை.
o