#9
விலக்கப்படவேண்டிய ஒருவன்
என்று அஞ்சி ஓடும்
ஒவ்வொருவரையும் நிறுத்திக் கைபிடித்து
காதோரம் சொல்லவேண்டும்
நண்பா,
குரங்குகளின்
பசியாற்றும்படி அனுப்பப்பட விதைகளைச்
சுற்றியிருக்கும் ஒரு ஈரம்
நீ பார்க்கும் பழமல்ல.
0
#10
ஒற்றை முகமாய்
உள்ளிறங்கும் உன் அன்பை
சில சொற்களின் நியாபகம் கொண்டு அழிக்க வேண்டியிருக்கிறது
யாருக்கோவான பாவனையுடன்
புன்னகைத்துக் கடந்த நாட்களை
ஓட்டிப்பார்க்கிறேன்
பொம்மைக்கடையில் தன் குழந்தையைக் கண்டெடுக்கும்
சிறுமியின் கனவில்
ஆடையை நினைத்துக்கொள்வது
அத்தனை நிகழ்தகவுகளிலும் அடங்காத
பேருண்மை என
எப்பொழுது உணரப்போகிறீர்கள்?
o
பின்னூட்டமொன்றை இடுக