Posts Tagged ‘முத்துக்குமார்’

ஈழம் இல்லாததைக் கொண்டாடுவோம்

ஜூன் 11, 2009

இதையும் வெற்றிஎன்பார் அவர்
என் இடங்தனை என்னிடம் பிடிங்கி
மீட்டு விட்டதைக் கொக்கரிப்பார்
வெற்றியென விழாக் கொண்டாடுவார்
என் சகோதரன் முதுகில் மிதிப்பார்
மிதித்த குஷியில் குதிப்பார்
பலமுறை பெற்றதை மீண்டும் பெறும்வரை குதிப்பார்
எனக்குப் பிறந்தான் வயதொத்தவனும்
என்னைப் பெற்றான் வயதொத்தவனும்
போராட்டமென செத்துத் தொலைகையில்
எவன் எப்படிப் போனால் எனக்கென்ன?
கோவணம் முதல் கோமியம் வரை இலவசமாய்க் கிடைக்கையில்
நடிகனுக்கு ஓட்டுப் போட்டு
நடிகைக்கு கோவில் கட்டினால்
சாபல்யம் அடைந்துவிடப் போகிறது ஜென்மம்

பிரபாகரனுக்கு என்ன ஆனால் நமெக்கென்ன?

மே 21, 2009

தமீழீழ தேசிய தலைவர் குறித்து வெளியெங்கும் அலைந்து கொண்டிருக்கிறது ஏராளமான வதந்திகள் உண்மைகள் உலாவந்து கொண்டிருக்கின்றன. இந்த மாயக் கட்டுகளை உடைக்கக் கூடியவர் உடைக்கப் போகிறவர் அவரே என்ற நம்பிக்கையில் காத்திருப்போம் நாம்!
சரி இதில் தமிழ் வூடகங்களுக்கு என்ன அப்படி ஒரு பாசம்? என் தலைவர் இறந்துவிட்டதை சொல்வதை மட்டும் அப்படி என்ன வேகம்?என் சகோதர சகோதரி தினமும் நூற்றுக் கணக்கில் செத்துக் கொண்டிருக்கும்போது ஒரு புகைப்படத்தைக் காட்டப் பயந்த இந்த தொலைக்காட்சிகள் இன்று [...]

ஈழம்-ஒரு கருமம் புடிச்சவனும் சில வழக்கங்களும்!

மே 18, 2009

தனி ஈழ முகமூடியொன்று
வழக்கம்போல்
மலை முகட்டின்
வாசலில் கிடந்தது
உண்ணாவிரத மேடைஒன்றில்
வழக்கம்போல்
கொஞ்சம் பிரியாணி
சிதறி இருந்தது
நெஞ்சடித்து அழுதவனின்
மார்புக்குள் இறங்கிக் கொண்டிருந்தது
வழக்கம்போல்
அடுத்த நாட்டின்
சோம பானம
சகோதரனுக்காய் சகோதரி
பெற்றவனொருவன்
வழக்கம்போல்
பதநீர் குடித்துக் கொண்டிருந்தான்
முன்னோர்கள் போலிருந்தவன்
முகமூடி கழற்றிவிட்டு
விக் அணிந்து
வழக்கம்போல்
நடிக்கப் போய்விட்டான்
வழக்கம்போல்
என் சகோதரனை குறிவுடைத்து
என் சகோதரி யோநி கிழித்து
வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருக்கிறது
மகிழும் ராஜ பக்ஷி
வழக்கம்போல் கண்ணீரைத் துடைத்தபடி
இதை எழுதிக் கொண்டிருக்கிறான்
கையாலாகாத ஒரு கருமம் புடிச்சவன்!

ஆனந்த் Vs விகடன் 13.5.2009

மே 9, 2009

ஆனந்தவிகடனில் சில வார்த்தைகளை வாசிக்கையில் எழுத்துகளில் பிறக்கும் சில வார்த்தைகள் என் மேனியெங்கும் அலைந்து திரிந்து பரவெளிகளில் சஞ்சரித்து சில நாட்களில் செத்துப் போகிறது. கட்டிப்போட்டு வளர்க்கும் சிறுமுயற்சி இந்த தொடர்.
O
தன்னை ஒளித்துக் கொண்டு
கிரிக்கெட் கிசுகிசு எழுதும்
ஒருவனைப்
படிப்பவர்களின் எண்ணிக்கை
செத்துப் போகும்
சகோதரர்கள் பற்றி எழுதும்
ஒருவனைப்
படிப்பவர் போல் இரு மடங்கு
Page No 12
O
கனவில் செய்த உதவியின்
பரிசு
கண்ணாடியில் பணம்
உண்ணா விரதத்திற்கு
போர் நிறுத்தம்
Page No 19
O
பத்திரிகைக் காரனுக்குத் தெரியும்
ஓட்டின் விலை
படித்தபின்
இன்னும் ஒரு
புதிய தேர்தல் பார்வையாளர்
Page No 21
O
வடக்கிருந்த பிசிராந்தையார்
நீட்சிகள்
காத்திருக்கின்றன
லண்டனிலும் ஆஸ்திரேலியாவிலும்
கோப்பெருஞ் சோழர்கள்தான் [...]

முத்துக் குமரனுக்காய் காறி உமிழுங்கள்-முத்துக்குமார புராணம்-சில பதில்கள்..

பெப்ரவரி 2, 2009

இந்த பதிலைப் படிக்கும் முன்னர் என் இந்த பதிவில் நண்பர்களின் கேள்விகளைப் படித்துவிட்டு வாருங்கள் 
#################################################
தன் கருத்துகளை மென்மையாகவும் வன்மையாகவும் தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி… ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்..தமிழன் சாகக்கூடாது எனத்தான் நாம் போராடுகிறோம்.. அவன் இலங்கையில் இறந்தாலும் இங்கே சாஸ்திரி பவனில் இறந்தாலும் தமிழனின் இறப்பு கொடுமைதான்.. முத்துக்குமரனை நானும் தியாகி என சொல்லிச் செல்வதால் என்ன மாற்றம் வருமென நினைக்கிறீர்? இதைபோல் ஆயிரமாயிரம் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறோம்..இது போன்றதொரு உயிர் தியாகத்தால் என் [...]

முத்துக் குமார புராணம்

ஜனவரி 30, 2009

மீண்டும் ஒரு முட்டாள் முளைத்திருக்கிறான்
இந்தமுறை அவனது பெயர் முத்துக்குமரன்
மூன்று தலைமுறையாய்
இவர்கள் தீர்க்கததொரு தவறை
தன் தலைமுறையில்
மட்டும் தீர்த்துவிடுவார்
என தீக்குளித்திருக்கிறான்
இவர் தீர்க்கத்தெரியாதவரோ
தீர்க்க முடியாதவரோ இல்லை தமிழனே
தீர்க்க விரும்பாதவர்
அடுத்த தேர்தலில் ஓட்டுவாங்க அவர்தம் மரணம் தேவை
அடுத்த செய்தியில் நெஞ்சுபுடைக்கப் பேச அவர்தம் தோல்வி தேவை
பேரன்களில் பத்திரிகையில் முதல் பக்கம் போட அவர்தம் ரத்தம் தெறித்த புகைப்படம் தேவை
முதல் பக்கம் புகைப்பட வரலாறு போட்டு
மூன்று நிமிடம் செய்தி வாசித்து
முன்னூறு ரூபாய் கட்ச்சிநிதி கொடுத்து புகைப்படம் எடுத்து
கிளம்பிச் செல்கையில் அவர்கள் மறந்து
அடுத்த முக்கிய வேலையை [...]