Posts Tagged ‘silarojakkal’

நகரத்தான் குறிப்புகள்

செப்டம்பர் 2, 2009

எனக்குப் பொழுது போக வேண்டுமே
என்றேன்
நீயும் உன் சிலாங்குமென
தலையிலடித்துக் கொண்டாள்
இனிதான்
“ஜஸ்ட் ஃபார் டைம் பாஸ்”
பழக வேண்டும்
O
நெல்லை நிச‌ன்தான்லே
ம‌துரை ஆமாடி மாப்ளே
கோவை ஆமாங்
இதுவ‌ரை என‌க்குத் தெரிந்த‌து
எதிரில் நிற்கும்
எஸ் சாரை எதில்
சேர்ப்ப‌து?
O
ந‌க‌ர‌த்து அவ‌ல‌ம் குறித்து
எழுதிக் கொன்டிருந்தேன்
கீழே ஒரு நூறு ரூபாய் கிட‌ந்த‌து.
க‌விதை ஐந்து நிமிட‌ம் க‌ழித்து தொடர்ந்த‌து.
O
த‌ற்கொலை செய்து கொள்வ‌தற்காய்
மூன்று மணி நேர‌ம்
மின்க‌ம்ப‌ம் மேல்நின்ற‌வ‌ன்
காப்ப‌ற்ற‌ப்பட்டான்
நாங்க‌ள் வ‌ருத்த‌த்துட‌ன் திரும்பி வ‌ந்தோம்
o
க‌ன்ன‌ம் கிள்ளி
விளையாடிக்கொண்டிருந்த‌து குழ‌ந்தை
க‌ண் பார்த்து சிரித்தாள்
பெண்ணொருத்தி
ம‌ஞ்ச‌ன‌த்தி ம‌ர‌ம்மேல்
பொழிந்துகொண்டிருந்த‌து ம‌ழை
கீழே கிட‌ந்த‌ நூறுருபாய்
ம‌ட்டும் எடுத்துக்கொண்டு ர‌யிலேறினேன்
O
அவர்கள் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள்
எல்லா அறைக்கும் மின்விசிறி
ஏ.சி கார் [...]

இரவுகள் படைத்தல்

ஜூலை 25, 2009

தீராக் கனவுகளை
தீர்க்கும் பகல்களுக்குக் காத்திருக்கும்
இரவுகள்
எனக்கென படைக்கப் பட்டவை
தீர்க்கப் பட்ட கனவுகளுக்குப் பின்
அடுத்த கனவிற்கான இரவுகள்
என்னால் படைக்கப் பட்டவை
o
எல்லாத் தனிமை இரவுகளிலும்
என்னை யாரென
எனக்குச் சொல்வது
நானா?
இன்னொரு நானா?